
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துண்ட்லா நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது காதி ராஞ்சோரை சேர்ந்த அன்ஷ் என்ற சிறுவன், “ஃபியூச்சர் கிரிக்கெட் அகாடமி”யை பிரதிநிதித்துவப்படுத்தி, துண்ட்லா பகுதியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பந்து நேராக அவரது மார்பில் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் பந்து வேகமாக தாக்கியதும் சிறுவன் மயக்கமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டாலும், அங்கு மருத்தவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் இன்னும் எந்தவொரு முறையான புகாரும் பெறப்படவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் சிறுவனின் மரணத்தை அவரது குடும்பத்தினர் இன்னும் ஏற்க முடியாமல் திணறி வருகிறார்கள். அவர் உயிருடன் இருப்பதாக நம்பிக்கையுடன், சிகிச்சைக்காக ஆக்ராவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பின் அவரது குடும்பத்திடம் நிலையை கூறி புரிய வைத்த பின் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது. இச்சம்பவம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் சீரான கண்காணிப்பு தேவைப்படுவதைக் தெளிவாக வெளிக்காட்டுகிறது.