
திருவனந்தபுரத்தில் உள்ள அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவில் முக்கியமான மாற்றத்தை கேரளா அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்டு வந்த உப்புமாவுக்கு பதிலாக இனிமேல் முட்டை பிரியாணி, புலாவ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ், இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.
2024 ஜனவரியில், ‘ஷங்கு’ என்ற சிறுவன், “உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி, சிக்கன் குடுப்பீங்களா?” என கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தக் குழந்தையின் குறும்பான கோரிக்கை, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது, ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் குழந்தையின் விருப்பம் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய அங்கன்வாடி உணவு மெனு – வாரந்தோறும்
கீழே கேரளா அரசின் புதிய அங்கன்வாடி உணவுத் திட்ட விவரம்:
திங்கட்கிழமை:
காலை: பால், அரிசி உருண்டை, கொழுக்கட்டை
மதியம்: சாதம், பச்சைப்பயறு கறி, உப்பேரி
தின்பண்டம்: தானியங்கள், பாயாசம்
செவ்வாய்க்கிழமை:
காலை: நியூட்ரி லட்டு
மதியம்: முட்டை பிரியாணி / புலாவ், பழங்கள்
தின்பண்டம்: பாரம்பரிய ராகி
புதன்கிழமை:
காலை: பால், அரிசி உருண்டை, கொழுக்கட்டை, வேர்க்கடலை
மதியம்: பச்சைப் பயிறு கஞ்சி, சோயா ப்ரை
தின்பண்டம்: இட்லி, சாம்பார், புட்டு, பட்டாணி
வியாழக்கிழமை:
காலை: ராகி
மதியம்: சாதம், முளைகட்டிய பச்சைப்பயிறு, கீரை பொரியல், சாம்பார், முட்டை ஆம்லெட்
தின்பண்டம்: பழங்கள்
வெள்ளிக்கிழமை:
காலை: பால், கொழுக்கட்டை
மதியம்: சாதம், பச்சைப்பயிறு கறி, அவியல், காய்கறிகள்
தின்பண்டம்: உடைத்த கோதுமை புலாவ்
சனிக்கிழமை:
காலை: ஊட்டச்சத்து லட்டு
மதியம்: காய்கறி புலாவ், முட்டை, ரைதா
தின்பண்டம்: தானிய பாயாசம்
இந்த புதிய திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்துடன் கூடிய சுவையான உணவுகளை வழங்குவது நோக்கமாகும். குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி, சத்துசரிவுக்கான விழிப்புணர்வு ஆகியவற்றில் இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.