சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். நேற்று நடந்த இந்த கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி எழுந்து பேசினார். அப்போது திமுக கவுன்சிலர் சுகாசினி குறுக்கிட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுகாசினி யாதவமூர்த்தியின் கன்னத்தில் பலமுறை அடித்துவிட்டார்.

இது அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த உறுப்பினர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு சொந்தமான டெண்டர்களை திமுக அமைச்சர்கள் மட்டுமே எடுப்பதாக யாதவமூர்த்தி குற்றம் சாட்டிய நிலையில் சுகாசினி குறுக்கிட்டதால் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாக மேயர ராமச்சந்திரன் கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.