ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தாக்குதலை தொடங்கியுள்ளது. தற்போது இரு நாடுகளும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.