
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் மாதவனிடம் சென்று தீபபாலன், வேலை பார்க்கும் போது ஒருநாள் சம்பளம் தர வேண்டி உள்ளது என்று கூறினார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தகராறு முற்றியது.
இதைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி தீபபாலன் வீட்டிற்கு சென்ற மாதவன், அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அதோடு தீப பாலனை கொன்று விடுவதாக கூறி மிரட்டிய அவர் அங்கிருந்து சென்றார்.
பின்னர் இது தொடர்பாக தீபபாலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாதவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.