தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ளது. கட்டிடக் கலையில் சிறந்து விளங்கும் இந்த கோவிலுக்கு தினமும் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோவிலின் தேரோட்டம் வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தஞ்சாவூரில் வருகிற 7-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.