
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜாபரவாடி கிராமத்தில் ராஜூ கந்தப்பா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சாரதா (24) என்ற மனைவியும் 3 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜூவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இது அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் ராஜூவை அழைத்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்தனர்.
பின்னர் அவரை ஊரில் இருக்கக் கூடாது மும்பைக்கு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக ராஜூ தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் மும்பைக்கு சென்ற நிலையில் அவர் இளம்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது இளம்பெண்ணின் சகோதரர் தத்தாத்ரயேவுக்கு தெரிய வரவே அவர் ராஜுவை கொலை செய்ய திட்டமிட்டு ஊருக்கு அழைத்துள்ளார்.
அதன்படி இளம் பெண் மூலமாக சமாதானம் பேச வரும்படி ராஜூவை அழைத்த நிலையில் அவர் தன் மனைவி மற்றும் மகளுடன் காதலியை பார்க்க ஆசையாக வந்தார். அப்போது அவர்களை ஒரு தனியான இடத்திற்கு அழைத்து சென்று இளம் பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு ராஜு மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண்ணின் சகோதரர் கோபத்தில் அரிவாளால் வெட்டிவிட்டார். இதை தடுக்க சென்ற சாரதாவையும் அவர் அரிவாளால் வெட்டினார்.
இதில் இருவரும் குழந்தையின் கண் முன்னே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தனர். இந்த கொலையை இளம்பெண், அவரது சகோதரர் மற்றும் துக்காராம் ஆகியோர் சேர்ந்து செய்துள்ளனர். இந்நிலையில் ஆதரவற்ற நிலையில் கிடந்த குழந்தையை போலீசாட் மீட்ட நிலையில் இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். . மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.