திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். அவர் திருப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்ப்பது தெரியவந்தது. இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். சடலமாக மீட்கப்பட்ட அந்த இளம்பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை கொலை செய்த மர்ம நபர்களின் உருவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.