பஞ்சாபின் அம்ருத்சர் நகரத்தில் கத்தியான் வாலா பஜார் பகுதியில் நேற்று பிரபல ரவுடியான ரவ்னித் சிங்கை இருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவ்நித் சிங் தனது ஸ்கூட்டியில் நண்பருடன் பயணிக்கும்போது எதிரே வந்த இருவர் அவரை  சுட்டனர். இதில் படுகாயமடைந்து ரவ்னித் தரையில் விழுந்துவிட்டார். இது தொடர்பான CCTV காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

சம்பவ இடத்தில் இருந்த ரவ்னித் சிங்கின் நண்பர் ஒருவர் துப்பாக்கி எடுத்து தாக்கியவர்களை நோக்கி பதிலடி துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், போலீசார் விரைந்து வந்து ரவ்னித் சிங்கை அம்ருத்சர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அம்ருத்சர் ADCP விஷால்ஜித் சிங் கூறியதாவது: “இருவர் ரவ்னித் சிங்கை சுட்டனர். சம்பவ இடத்துக்கு நாங்கள் விரைந்து வந்தோம். விசாரணை நடைபெற்று வருகிறது. சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன;

குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்றார். ரவ்னித் சிங்கை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது போலீசார் இதை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.