இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்கடலில் மீன்களுக்கிடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதாவது பசுபிக் பெருங்கடலின் அடியில் 2 மீன்கள் ஒன்றுக்கொன்று மணலை வீசும் சம்பவம் இந்த வீடியோவில் காணப்படுகிறது.

முதலில் ஒரு மீன் தனது வாயில் மணலை எடுத்துக் கொண்டு மற்றொரு மீன் மீது வீசிய நிலையில் பதிலுக்கு அந்த
மீனும் வாயில் மண்ணை எடுத்துக்கொண்டு அந்த மீனின் மீது வீசுகிறது. இவ்வாறு  2 மீன்களும் மண்ணை வீசி சண்டை போட்ட நிலையில் இதனை பின்னணி குரலாளர் ஸ்டிவ் மேன் என்பவர் தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அதில் ஒருவர் “பசிஃபிக்கில் நடந்த மிக குறும்பான யுத்தம்” என்று கூறினார். இன்னொருவர் “நீங்கள் எரிச்சல் ஊட்டும் பக்கத்து வீட்டுக்காரருக்கு மிக அருகில் வசிக்கும் போது இப்படித்தான் நடக்கும்” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மேலும் உயிரியல் வல்லுநர்கள் இந்த சண்டையை”பகுதி உரிமை சண்டை” என வர்ணித்து வரும் நிலையில், இணையம் இதனை ஒரு சாகசமான அடிதடி என நகைச்சுவையாக பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும் .