மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனது காதலியுடன் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

பின்னர், அதில் மனமுடைந்த அந்த இளைஞர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மும்ப்ரா போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..