
கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசியில் டெல்லி 19.3 அவர்களின் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. அசுதோஷ் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய அசுதோஷ் ஷர்மா, “நான் தனியாக பயிற்சி எதுவும் செய்யவில்லை. ரஞ்சிகோப்பை, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடியது எனக்கு அதிகமாக உதவியது.
நான் நிறைய பயிற்சி செய்துள்ளேன். சிக்ஸர் அடிக்க மட்டும் இரண்டு மணி நேரம் பயிற்சிக்காக ஒதுக்குகிறேன். இது எனக்கு நிறைய உதவியது. எல்லாவற்றிற்குமே துல்லியமான பயிற்சி தேவை. கடந்த வருடம் சென்னையில் எதிராக விளையாடிய பொழுது தோனியிடம் பேசினேன். களத்திற்கு சென்று போட்டியை முடிக்கும் போது உங்களுடைய மனதில் என்ன ஓடும் என்று கேட்டேன். அதற்கு அவர் நிறைய விஷயங்களை சொன்னார். ஆனால் அந்த ரகசியத்தை மட்டும் வெளியில் சொல்லவே மாட்டேன்” என்று கூறியுள்ளார்.