ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகர் மாவட்டத்தில் நீம் கா தானா நகரில் வசித்து வருபவர் அசோக் யாதவ். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயது மகள் மற்றும் 5 மாத இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் அசோக் தனது மனைவியுடன் ஆண் குழந்தை பிறக்கவில்லை என அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல சம்பவ நாளன்று அசோக் அனிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபத்தில் தனது 5 மாத இரட்டை குழந்தைகளையும் தரையில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நிலத்தில் குழந்தைகளின் உடலை புதைத்து உள்ளார்.

இதுகுறித்து அறிந்த அனிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை குற்றவாளியான அசோக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை   ஏற்படுத்தியுள்ளது.