
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மார்ச் 15-ஆம் தேதி ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னரே அதிர்ச்சிகரமான பாதுகாப்பு மீறல் (security breach) சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. The Atlantic பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க், இந்தத் தாக்குதலின் விவரங்களை “Signal” என்ற குழு உரையாடலில் முன்கூட்டியே அறிந்திருந்தார். இந்த குழுவில், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் இருந்தனர்.
வழக்கமாக ரகசியமாக வைக்க வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் குழு உரையாடலில் இடம்பெற, அந்தக் குழுவில் தவறுதலாக ஒரு பத்திரிகையாளர் சேர்க்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அறிவிப்புகளும், தாக்குதலுக்கான இலக்குகள், பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தாக்குதல் தொடங்கும் நேரம் என அனைத்து விவரங்களும் அந்த உரையாடலில் இடம்பெற்றதாக கோல்ட்பெர்க் வெளியிட்டுள்ளார். இந்த தகவல்கள் தவறுதலாக வெளியானாலும், அவர் அவற்றை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.