
சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஆளுநர் ஆர். என் ரவி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் பார்த்திபன் பேசியதாவது,”நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். நடிக்கும் போது கூட எனக்கு சரியாக சிகரெட் பிடிக்க தெரியாது என சக நடிகைகள் கூறியுள்ளனர். எனக்கு சிகரெட் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா. அவர் அளவுக்கு அதிகமான பீடி பிடிப்பார்.
இதனால் அவருக்கு கடைசி காலத்தில் கேன்சர் நோய் வந்து இறந்தார் இதனை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதுவே எனக்குள் புகை பிடிக்கக் கூடாது என்ற மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் குடித்த பீடியின் பெயர் “கவர்னர்” பீடி. தயவு செய்து இதை யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. இது விளையாட்டாக கூறவில்லை. அந்த காலத்தில் இப்படி ஒரு பீடி இருந்தது. அதனை என் அப்பா என்னை வாங்கி வர சொல்வார்.
ஆனால் இப்போது அது இல்லை. ஒரு பீடிக்கு பெயர் வைக்கும் போது எப்படி கவர்னர் பதவியின் பெயரை வைக்க முடியும்? அது எவ்வளவு உயர்ந்த பதவி இதை எதற்காக நான் சொல்கிறேன் என்றால் அந்தப் பதவி ஒரு பீடிக்கு பெயராக வைப்பது என்பது வன்முறையை தடுக்க தகுந்த விஷயம். புகைப்பிடிப்பதால் காசநோய் வருவதற்கு அதிகப்படியான சாத்திய கூறுகள் உள்ளன என்பதால் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ் மிக அழகாக மணந்து வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு அழகாக பாதுகாக்கப்படுவதற்கு ஆளுநருக்கு என்னுடைய மரியாதையே தெரியப்படுத்துகிறேன். நான் பேசியது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன் ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார். அவருக்கு புரியும் அதனால் தமிழிலேயே பேசலாம் என கூறினார்கள். எனவே அவருக்கு நான் தமிழ் புத்தகங்களை பரிசாக அளித்துள்ளேன்” என தெரிவித்திருந்தார்.