
மிசோரம் மாநிலத்தில் வசித்த சியோனா சனா என்ற நபர், 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரன்கள் என ஒரு மிகப்பெரிய குடும்பத்தை நடத்தி, உலகம் முழுவதும் கவனம் பெற்றவர். 1945ஆம் ஆண்டு பிறந்த சியோனா, தனது முதல் மனைவியான ஜதியாங்கியை 17வது வயதில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2004ஆம் ஆண்டு தனது கடைசி மனைவியை திருமணம் செய்துகொண்டார். அவரது குடும்பம் 2011-ஆம் ஆண்டு உலக சாதனை அகாடமி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் 2019-ஆம் ஆண்டு லண்டன் உலக சாதனைகளால் ‘உலகின் மிகப்பெரிய குடும்பம்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
சியோனா தனது பரந்த குடும்பத்திற்காக பக்தாங் என்ற இடத்தில் நான்கு மாடி மாளிகையைக் கட்டி, அதற்கு “சுவான் தார் ரன்” என பெயரிட்டார், அதற்கு “புதிய தலைமுறை வீடு” என்ற பொருள். இந்த வீட்டில் 100 அறைகள் உள்ளன. இது அவரது மனைவிகள், குழந்தைகள் மற்றும் பேரன்கள் அனைவரும் வசதியாக தங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வீடு தற்போது ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. சியோனாவின் வீட்டில் ஒழுங்கும் அமைதியும் நிரம்பி உள்ளது. இதற்காக அவர் உலக அளவில் பாராட்டப்பட்டார்.

2021-ஆம் ஆண்டு 75-வது வயதில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சியோனா சனா மரணமடைந்தார். அவரின் மறைவிற்குப் பிறகும், அவரது குடும்பம் இன்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றது. சமீபத்தில் இந்த குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.