மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இரு சமூகத்தினர் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவங்களும் அரங்கேறியது. இந்த பிரச்சனைகளால் மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் சமீபத்தில் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தற்போது மணிப்பூரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சூரத் சந்த்பூர் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் 9 வயது சிறுமி கொடூரமான காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுமி நேற்று மாலை 6:00 மணி அளவில் காணாமல் போன நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் . சிறுமி காணாமல் போன நேரத்திலிருந்து அவரின் பெற்றோரும் அந்த நிவாரண முகாமில் இருந்தவர்களும் தீவிரமாக தேடி வந்தனர். அந்த நிவாரண முகாமின் வளாகத்திற்குள் சிறுமி பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் மற்றும் ரத்த காயங்கள் இருக்கிறது. இதன் காரணமாக சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.