
இங்கிலாந்தின் ஸ்விண்டன் நகரில் ஜெம்மா ஹார்ட்(45) என்பவர் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக ஜெம்மா வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜெம்மா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர் வளர்த்த இரண்டு நாய்களில் ஒன்று இறந்து கிடந்தது. மற்றொன்று மிகவும் சோகமாக இருந்தது. மேலும் உயிர் வாழ்வதற்காக அந்த நாய்கள் ஜெம்மாவின் உடலின் ஒரு பகுதியை தின்றதாக தெரிகிறது.
ஜெம்மா செல்ல பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டிருந்தார். அவர் மனம் மற்றும் உடல் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு உடல் வலி மற்றும் தூக்கமின்மை பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. ஜெம்மா உயிரிழந்த பிறகு உணவில்லாமல் தவித்த நாய்கள் உயிர் வாழ்வதற்காக அவரது உடலை சாப்பிட்டதாக தெரிகிறது. இந்த வழக்கினை விசாரித்த ஸ்விண்டன் நீதிமன்றம் ஜெம்மாவின் மரணத்தை தற்கொலை என பதிவு செய்தது. ஜெம்மாவின் மரணத்தில் எந்த விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை. அவரது நாய்கள் உயிர் வாழ்வதற்காக உடலை சாப்பிட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.