நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கல்வி நிதி மறுப்பு விவகாரம் ஈடுபட்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியதாவது, பாஜக ஆளாக மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி கூறியதாவது, மும்மொழி கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. திமுக எம்பிக்கள் முன்மொழி கொள்கையை ஏற்பதாக ஒருபோதும் கூறியதில்லை. தமிழ்நாடு மக்களையும் நாகரீகமற்றவர்கள் என அமைச்சர் கூறியது புண்படுத்துகிறது.

ஆகவே மத்திய அமைச்சருக்கு எதிராக திமுக எம்பிக்கள் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் என கனிமொழி எம்பி கூறினார். உடனே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என்று பேசியதை திரும்ப பெற்றுக் கொள்வதாக எம்.பி கனிமொழியிடம் தெரிவித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.