
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக மோகன் யாதவ் இருக்கிறார். அந்த மாநிலத்தில் 1.27 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 1250 ரூபாய் மகளிர் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்தை தொடங்கிய மோகன் யாதவ் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது மாநிலத்தின் பல பகுதிகளில் அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாகவும் அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாகவும் கூறினார்.
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள். அவர்கள் சமூகத்தில் வாழ்வதற்கே தகுதி இல்லாதவர்கள். ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் மத சுதந்திர சட்டம் அமலில் இருக்கிறது. இந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இனி கட்டாயம் மதமாற்றம் செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும் அதிகபட்ச தண்டனையாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.