
முன்னதாக மா பா பாண்டியராஜனை, ராஜேந்திர பாலாஜி மிரட்டினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக சார்பில் நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ராஜேந்திர பாலாஜிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது, உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுனக்கம் காட்டக்கூடாது. கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.