
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூரில் ஆன்லைன் கேம் தொடர்பாக மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தகராறு செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது Free Fire கேம் தொடர்பாக மாணவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு குழுக்களாக மாணவர்கள் பிரிந்து கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து தாக்கிய நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் எதற்காக சண்டை போட்டுக் கொண்டார்கள் என்ற விவரம் தெரியாத நிலையில் இணையதளத்தில் வெளியாகும் வீடியோவை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
Students in Eluru, #AndhraPradesh have a spat over playing Free Fire game and end up fighting on the road.
Locals immediately informed the police who detained the students, counselled them and let them go. pic.twitter.com/JD2qZwJrdn
— Deccan Daily (@Deccan_Daily) February 19, 2025