
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகேந்திர சிங் தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது தோனி எப்பொழுதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்தக்கூடிய ஒருவர். வீரர்களிடம் அதிகமாக எதுவும் பேச மாட்டார். அதுவே தோனியின் பலமாக இருந்தது . இருந்தாலும் தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
அப்பொழுதே அவர் மிகப்பெரிய வீரராக மாறி சாதனைகளையும் நிகழ்த்தி விட்டார். தோனியின் தலைமையின் கீழே விளையாடும் பொழுது ஒவ்வொரு வீரர்களுமே அவர்களுடைய கண்களை பார்த்தால் பயப்படுவார்கள். அவர் சத்தம் போட்டு ஒருபோதும் நான் பார்த்ததே கிடையாது. அதுதான் அவருடைய பலம் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் கண்களை பார்க்கும்போது நீங்களே பயப்படுவீர்கள்” என்று பெருமையாக கூறியுள்ளார்.