
இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா(29). இவர் இந்தியாவின் உயர்தர நிலை விளையாட்டு வீராங்கனையாகவும், உலக அளவில் டேபிள் டென்னிஸில் 115 ஆவது இடத்திலும் உள்ளார். இவர் இந்தியாவின் சிறந்த மகளிர் ஒற்றையர் வீராங்கனை ஆவார். மேலும் இவர் 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
இந்த நிலையில் மணிகா பத்ராவின் தந்தை க்ரிஷ் பத்ரா (65) கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள இந்தர்புரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவிற்கு அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மறைந்த மணிகா பத்ராவின் தந்தைக்கு ஆன்மா பிரார்த்தனை விழா இன்று நடைபெற்றுள்ளது.