தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அவரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு அரசியல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.

இப்படியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் தெளிவில்லை. அவர் தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டை எடுத்து வைக்க வேண்டும். அப்போது தான் எங்களுடைய கருத்தை நாங்கள் கூற முடியும். விஜய் எந்த வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவருமே 2026 ஆம் ஆண்டு நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் விஜய்யும் பேசுகிறார். ஆனால் அது மக்கள் கையில் தான் உள்ளது என்று ஓபிஎஸ் பேசியுள்ளார்.