உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பிலங்கான பகுதியில் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதன் மோகன் செம்வால்- யசோதா தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் கடும் குளிரு காரணமாக குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி இருவரும் தூங்கி உள்ளனர். இதில் நெருப்பிலிருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே இருவரும் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து அவரது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தபோது தம்பதியினர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி தம்பதியினரின் உடலை உள்ளூர் மக்கள் தகனம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.