
பார்டர் கவாஸ்கர் 5 போட்டிகள் கொண்ட தொடரின், 5வது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 185 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவுக்கும், ஆஸ்திரேலியா வீரர் சாம் கான்டாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதாவது இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரின் உம்ரா பந்து வீசினார். அப்போது உம்ரா பந்த வீச தயாராக இருந்தபோது கவாஜா தயாராக இல்லை, கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார். இதனால் சிறிது நேரம் காத்திருந்த பும்ரா அதிருப்தி அடைந்தார். அதோடு தன்னுடைய ஸ்டைலில் ஏதோ சைகை செய்தார். ஆனால் இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாத சாம் கான்டாஸ் உள்ளே நுழைந்து பும்பராவை வம்பு இழுத்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.