
ஆந்திராவில் 21 வயது இளம் பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து இரு குழந்தைகளுடன் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அந்த சமயத்தில் பானி தேஜா என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்படவே அந்த வாலிபர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் தான் கணவரை பிரிந்த வாழ்ந்து வருவதாகவும் இரு குழந்தைகள் இருப்பதாகவும் கூறி அந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் வாலிபர் கோபத்தில் அந்த பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார். மேலும் இதன் காரணமாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.