
டெல்லியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்து பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதனை அடுத்து ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, இன்று இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. புதிதாக பிறந்திருக்கும் 2025-ஆம் ஆண்டில் இந்தியா மேலும் வலுப்பெறும்.
இந்த ஆண்டு இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக அமையும். டெல்லிக்கு இன்று முக்கியமான நாள். வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகளை வழங்கி நான்கு கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றினேன். எனக்காக வீடு கட்டி இருக்கலாம். ஆனால் கட்டவில்லை. இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்ற உறுதியுடன் வேலை பார்க்கிறோம்.
அதுதான் எனது கனவாக இருக்கிறது. டெல்லி அரசு 10 ஆண்டுகளாக பேரழிவை சந்தித்தது. மதுக்கடைகளில் ஊழல், அரசு பள்ளிகளில் ஊழல் என பல வழிகளில் மோசடி நடந்து வருகிறது. இன்று வீடுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவே நான் வந்துள்ளேன். முழு நாடும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.