பீகாரில் வசிக்கும் ஒருவருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த தம்பதிக்கும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப உறவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகும் அந்தப் பெண் தனது காதலனோடு தகாத உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் காதலனுக்கு அவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

இருவரும் திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே பழகி வந்தனர். அந்த நபருக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஊர் மக்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. கட்டாயப்படுத்தி ஊர் மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.