மும்பையில் ஜூலியட் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் உணவு தானியங்களுடன், போதைப்பொருட்களை கொண்டு வந்து பெங்களூரில் இறங்கியுள்ளார். அதன் பின் அங்குள்ள மக்களுக்கும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் அதை விற்று உள்ளார். இதைத்தொடர்ந்து ரோஸ்லிம் என்ற பெண் அவரிடம் இருந்து போதை பொருள்களை பெற்று, கே.ஆர் புரத்தில் உள்ள டி.சி பாளையத்தில் உள்ள ஒரு கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது.

அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கடைக்கு அருகே அமர்ந்திருந்து பார்த்துள்ளனர். அப்போது ரோஸ்லிம் போதை பொருள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின் அவரிடம் இருந்து 12 கிலோ வெள்ளை மற்றும் மஞ்சள் நிற MDMA படிகங்கள் மற்றும் 70 சிம்கார்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து டெல்லியில் இருந்து போதை மருந்து கொண்டு வந்த ஜூலியட் என்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.