
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பாராசிட்மல் மாத்திரைகளை காய்ச்சல் மற்றும் தலைவலி போன்றவைகளுக்கு வலி நிவாரிணியாக பயன்படுத்தும் நிலையில் அது ஒரு தரமற்ற மாத்திரை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு கூட பாரசிட்மல் மாத்திரைகளில் தரவில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் பாராசிட்மல் மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்துவோருக்கு என்னென்ன உபாதைகள் ஏற்படும் என்பது குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருமாம்.
அதாவது இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாம் என்ற பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 80 ஆயிரம் நோயாளிகளின் தரவு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அந்த மாத்திரையை அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, நீண்ட நாள் சிறுநீரக நோய் போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால் அவர்களுக்கு 19% சிறுநீரக நோய்க்கான ஆபத்தும், 9 சதவீதம் இதய செயலிழப்புக்கான அபாயமும், 7 சதவீதம் உயர் ரத்த அழுத்தத்திற்கான அபாயமும் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.