உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக கீலாவதி என்ற 34 வயது பெண் சென்றுள்ளார். இந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யும் போது தவறுதலாக ஸ்பாஞ்சயை‌ வயிற்றில் வைத்து தவறுதலாக தைத்து விட்டனர். இதில் தொற்று ஏற்பட்டு அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார். அவருக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கர்ப்பப்பையை எடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

ஆப்ரேஷன் செய்த பிறகு டிஸ்டார்ஜ் செய்யப்பட்ட அவருக்கு அடிவயிற்றில் கடுமையான வலி மற்றும் வீக்கம்‌ ஏற்பட்டது. இதன் காரணமாக சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் வயிற்றில் ஸ்பாஞ்ச் இருப்பது தெரிய வந்தது. மேலும் இதனால் ஏற்பட்ட தொற்றில் அந்த பெண் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.