
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவரது மகள் 11ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சிறுமிக்கு கணித தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்ததும் சிறுமி அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்வதற்காக பெருஞ்சிலம்பு பகுதியில் வந்து இறங்கினார். அவர் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சிறுமியின் முகத்தில் கை குட்டையை வைத்து அழுத்தியுள்ளார்.
இதனால் சிறுமி மயங்கி விழுந்தார். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த சிறுமி தனது ஆடைகள் கலைந்து வீட்டிற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வைத்ததால் மனைவி மயங்கிவிட்டார். பின்னர் அவரை பலாத்காரம் செய்துவிட்டு மர்ம நபர் தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். கடந்த மாதம் மாணவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.
அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் கேட்டபோது தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.