ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணித்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதிவேகமாக சொல்லும் அந்த கார் மீது அந்த சிறுவன் அமர்ந்துள்ளான். தனது தந்தை போலீஸ்காரர். அவர் என்னை பாதுகாப்பார் என அந்த சிறுவன் கூறும் காட்சிகளும் வீடியோவில் உள்ளது.

இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்தனர். அந்த வீடியோவவை பார்த்த பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் இது போன்ற ஆபத்தான சாகசங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.