பாலிவுட் சினிமாவில் 90’ஸஸ் கனவு கன்னியாக வலம் வந்தவர் மம்தா குல்கர்னி. இவர் 80 மற்றும் 90களில் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ‌ இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமாவை விட்டு விலகிய நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். கடந்த 1997 ஆம் ஆண்டு சட்டவிரோத போதை பொருள் கடத்தல் வழக்கில் துபாய் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டு 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்ட விக்கி கோஸ்வாமி என்பவருடன் மம்தா குல்கர்னி உறவில் இருந்துள்ளார்.

அவர் சிறையில் இருந்த போது பலமுறை நேரில் சென்று சந்தித்த மம்தா பின்னர் அவர் சிறையில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு விக்கி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் போதை பொருள் வழக்கில் கைதனார். இதில் மம்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அப்போது இந்த விஷயம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் 25 வருடங்களாக வெளிநாடுகளில் இருந்த மம்தா தற்போது 52 வயது ஆகும் நிலையில் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

பின்னர் அவர் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது விக்கியுடன் தொடர்பில் இருந்தது உண்மை எனவும் ஆனால் அவர் தவறானவர் என்று தெரிந்து விட்டதால் அவரிடமிருந்து பின்னர் விலகி விட்டதாகவும் கூறினார். அதோடு விக்கியை தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினார். வீட்டில் சிறையில் இருக்கும் போது பிற பாலிவுட் பிரபலங்கள் அவரை சந்தித்தது போன்று தான் நானும் சென்று சந்தித்தேன். மேலும் இதுவரை நான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன் எனவும் விக்கிக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறினார்.