முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் ராமதாஸ் அதானி நிறுவன ஊழல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலமைச்சர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவர்தான் அறிக்கைகளும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். ஸ்டாலினுக்கு பாமக பாஜக கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஐயா ராமதாஸ் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும் சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை செய்து வருகிற ஐயா ராமதாஸ் அவர்களை சிறுமைப்படுத்தும் வகையிலான முதல்வர் ஸ்டாலினின் அலட்சிய பேச்சு அரசியல் அநாகரீகம். அடிப்படை இல்லாது ஏதாவது கேட்டாரா ஐயா ராமதாஸ்? அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்ட விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாக பதற்றம் அடைவது எதற்காக? இயல்பான கேள்விக்கு இவ்வளவு சீற்றம் எதற்காக? அதானியை சந்தித்தீர்களா எனும் கேள்விக்கு ஆம் இல்லை என பதில் சொல்ல வேண்டும்.

ஆனால் அவருக்கு வேறு வேலை இல்லை என கூறி வசை பாடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு தானா? எதிர்க்கட்சியாக இருக்கும்போது எண்ணற்ற அறிக்கைகளை விடுத்தார் ஐயா ஸ்டாலின். அப்போது வேலை இல்லாது தான் அறிக்கைகளை விடுத்தாரா? எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என கேட்டாரு. அப்போது வேலையில்லாத தான் அரசியல் செய்தாரா..? அதானி குழுமம் லஞ்சம் கொடுத்த பட்டியலில் தமிழ்நாடு உள்ளது. இப்போது வரை முதல்வர் ஸ்டாலின் அது குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்? லஞ்சம் கொடுத்தார் எனும் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா இல்லை மறுக்கிறீர்களா?

அதானி குடும்பத்திடமிருந்து தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கியது யார்? பதில் சொல்லுங்கள் முதல்வரே. மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதானி குழுமத்தோடு ஒப்பந்தம் ஏதும் கடந்த மூன்று ஆண்டுகளில் போடவில்லை என கூறுகிறார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்துக்கான காரணத்தை நாடும், ஏடும் அறியும். முதல்வர் ஸ்டாலினும் இந்த சிக்கலில் அமைதி காப்பது ஏன்? ஊழல் பேர்வழி கௌதம் மீது பாய வேண்டிய முதலமைச்ச ஸ்டாலின் உண்மையை சொன்ன ஐயா ராமதாஸ் மீது பாய்வது என்ன நியாயம் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.