கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது. இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதோடு, பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தல் முடிவுகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதே நேரம் பாஜக தொண்டர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் விஜயாப்புரா மாவட்டம் ஹொல்கார் பகுதியில் வீரபத்ரப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக தொண்டர். இந்நிலையில் அவர் தேர்தல் முடிவுகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 3 தொகுதிகளிலும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த டிவியை வெளியே கொண்டு வந்து சாலையில் போட்டு உடைத்தார்.