உலக அளவில் உள்ள நாடுகளில் இருந்து வடகொரியா தனித்து நிற்கும் நிலையில் தென்கொரியா மீது பகை கொண்டுள்ளது. சமீபகாலமாக ரஷ்யாவுக்கு ராணுவ உதவிகள் வழங்குவது மற்றும் உக்ரைனுக்கு வீரர்களை அனுப்புவது என்று தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என உலக நாடுகளை பதற்றத்தில் வைத்துள்ளது. சமீபத்தில் தென் கொரியாவை எதிரி நாடாக வடக்கு உரிய அறிவித்ததோடு அந்த நாட்டுடன் இருந்த அனைத்து எல்லை தொடர்புகளையும் அழித்தது. அதோட தங்கள் நாட்டின் குப்பைகள் நிறைந்த பலூனை அங்கு அனுப்புவது போன்ற செயல்களில் வடகொரியா ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அந்த நாட்டுக்கு தொந்தரவு கொடுக்க ஒரு நூதன வழியை கண்டுபிடித்துள்ளது.

அதாவது எல்லை பகுதிகளில் அதிக அளவு ஸ்பீக்கர்களை 24 மணி நேரமும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வருகிறது‌. இதனால் தென் கொரியாவில் உள்ள டாங்கன் என்ற கிராமம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அதாவது இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் ஸ்பீக்கர்கள் அதிக ஒலியுடன் சத்தம் எழுப்புவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மேலும் கடந்த ஜூலை மாதம் முதல் இந்த சம்பவம் நடந்து வருவதாகவும் இதனால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருவதாகவும் தகவல் வெளிவந்து = அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.