
கர்நாடக மாநிலம் மைசூர் சாலையில் உள்ள கெங்கேரி போக்குவரத்து மேலாண்மை மையம் பகுதியில் சம்பவத்தன்று சந்தியா என்ற 30 வயதான பெண் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் சந்தியா மீதும் அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒரு பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்தியா மற்றும் பைக் ஓட்டுநர் சையத் அர்பாஸ் ஆகிய 2 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சொகுசு காரை ஓட்டி வந்த தனுஷ்(20) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் குடிபோதையில் காரை ஓட்டியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தனுஷை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.