ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் தடுப்பூர் கிராமத்தில் சிலை திறப்பு விழாவுக்காக பிளக்ஸ் பேனர் பொருத்தப்பட்டு இருந்தது. பிளக்ஸ் பேனரில் இருந்த கம்பி மின்சார ஒயரில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து நான்கு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வாலிபர் காயமடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலை ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.