
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனது கணவருடன் நித்யா என்ற பெண் வசித்து வந்தார். நித்யாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டுப் பிரிந்துள்ளார். பின்பு ஈரோடு மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு சந்தோஷ் குமார் என்பவர் உடன் நித்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நித்யா கர்ப்பமாகியுள்ளார். சந்தோஷ்குமார்-நித்யா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த உடன் அதனை விற்று விடுவதற்கு சந்தோஷ் குமார் நித்யாவை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெண் குழந்தையை விற்கும் நோக்கில் சந்தோஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.ஈரோட்டைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகியோரின் உதவியுடன் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தம்பதியினருக்கு பெண் குழந்தையை விற்க ஏற்பாடு செய்துள்ளனர். நித்யாவின் பெண் குழந்தையை வாங்கிய தம்பதியினர் ரூபாய் 4 லட்சம் கொடுத்துள்ளனர். ரூபாய் 4 லட்சத்திற்கு சந்தோஷ் குமார் குழந்தையை விற்றுள்ளார்.
இதனால் மனம் உடைந்த நித்யா குழந்தையை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் குழந்தையை விற்க ஏற்பாடு செய்த ஐந்து பேரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து ஐந்து பேரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையை வாங்கிய நாகர்கோவில் தம்பதியினர் இடையே விசாரணை நடத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிறந்த குழந்தையை விற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது