ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பல பயணிகள் பயணித்தனர். இந்த நிலையில் ரயிலில் ஒரு நபர் வெடிபொருட்களை கொண்டு சென்றுள்ளார். ரோஹ்தக் பகுதிக்கு அருகே ரயில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென அந்தப் பயணியின் பையில் தீ பிடித்தது. இந்த தீ அதி வேகமாக அந்த ரயிலின் பெட்டியில் பரவியது. இதனை அறிந்து ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து அனைத்திடங்களிலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் பெட்டியில் இருந்த 4 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த 4 நபர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து டெல்லிக்கு செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயிலில் பயணித்த பயணிகளுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே காவல்துறையினர் தெரிவித்ததாவது, பயணி வைத்திருந்த பையில் சல்பர் பொட்டாசியம் துப்பாக்கி அழுத்தம் ஏற்பட்டு வெடித்துள்ளது. இதனால் தீ அப்பகுதியில் வேகமாக பரவி உள்ளது என கூறினர்.