ஹைதராபாத்தில் ஒரு உணவகம் இயங்கி வருகிறது. இங்கு விநியோகிக்கப்பட்ட மோமோஸ் சாப்பிட்டதால் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மோமோஸ் தயாரிப்பு இடத்தை பார்வையிடுவதற்காக சென்றனர். அப்போது உணவு கட்டுப்பாட்டு துறையின் எந்த ஒரு வழிமுறையையும் மோமோஸ் தயாரிக்கும் இடத்தில் பின்பற்றபே இல்லை.

இதனால் தான் சுகாதார பிரச்சனை ஏற்பட்டு அதனை சாப்பிட்ட நபர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் உணவு கூடத்தை நடத்தி வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.