
2005 ம் ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், கிராமப்புற ஏழை மக்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்குடன் செயல்படுகிறது. இந்த திட்டத்தினால், பல்வேறு கிராமப்புற மக்கள் பயனடைகின்றனர். இருப்பினும், சமீபத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான தகவல்கள் வெளியாகின.
இதற்கு மத்திய அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் தகவலின் படி, அக்டோபர் 26, 2024-ம் தேதியிற்குள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் 13.1 கோடி பணியாளர்களின் ஆதார் எண்கள், அவர்களின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வேலைவாய்ப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்கவும், தொழிலாளர்களின் தகவல்களை உறுதிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், வங்கி கணக்கில் ஆதார் எண்களை இணைக்காத தொழிலாளர்களை விரைவில் சேர்க்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏற்கெனவே ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.