
குஜராத்தில் ஆன்லைன் மூலமாக முதியவர் ஒருவருக்கு மர்ம நபர்கள் கால் செய்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எனவும், ஐபிஎஸ் அதிகாரி எனவும் கூறி சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்ஸ் அப் கால் செய்துள்ளனர். அதோடு அந்த நபர் பண மோசடி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம் என்று அந்த கம்போடியா கும்பல் கூறியுள்ளனர்.
நாங்கள் சொல்லும்படி கேட்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று மிரட்டி, ரூ.1.26 கோடி பணத்தை தங்களது வங்கி கணக்கு அனுப்புமாறு கூறியுள்ளனர். பயந்து போன முதியவர் அந்த பணத்தை மோசடி கும்பலின் வங்கி கணக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்பு தான் ஏமாந்து விட்டது அறிந்த முதியவர் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். மோசடி செய்யப்பட்ட பணம் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றிவிட்டு கம்போடியா கும்பல் தலைமுறைவாகியுள்ளது. இத்தகைய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி அதிகரித்து வந்த நிலையில், இதுவரை சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.