கேரளாவின் முன்னாள் முதல் மந்திரியுமான, கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவருமான வி. எஸ் அச்சுதானந்தன் இன்று தனது 101 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். ஆகவே கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோன்று கோவா கவர்னரான பி.எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, மந்திரிகள் வி. சிவன் குட்டி, கே. என் பாலகோபால் மற்றும் ஜி. ஆர் அனில், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை உருவாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் கேரள இந்தியா கம்யூனிஸ்டுவின் செயலாளர் பினோய் விஷ்வம் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்தியாவில் மார்க் ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இவர் வர்த்தக யூனியன் செயல்பாடுகளின் வழியே அரசியலுக்கு வந்தவர் ஆவார். மேலும் கேரளா சட்டசபையின் உறுப்பினராக 7 முறையும், முதல் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர் ஆவர். அதோடு 3 முறை எதிர்க்கட்சி தலைவராகவும் கட்சி செயலாளர் ஆகவும் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினராகவும் நீண்ட காலம் பதவி வகித்தவர் ஆவார்.

அதோடு முதல் மந்திரி சட்டசபை உறுப்பினரின் பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன் கம்யூனிச கொள்கைகளை தொடர்ந்து பின் பற்றுவதில் ஆர்வம் கொண்டவர் ஆவர். இவர் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்காக இயக்கம் ஒன்றை தொடங்கினார். இதனால் அவர் முதல் மந்திரியாக இருந்த போது கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அவருடைய கட்சியின் தொண்டர்கள் அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.