உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பிரகதி கார்யா(28)) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்பூர் ஐஐடியில் எர்த் சயின்ஸஸ் துறையில் படித்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்துள்ளார். இந்நிலையில் பிரகதி கார்யா தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் பிரகதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, அவரது அறையில் ஒரு கடிதம் இருந்ததாகவும், அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல என்று பிரகதி எழுதி இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நடந்துள்ள 4-வது தற்கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.