
உத்தரப்பிரதேசத்தில், கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள சனாதன் ரஷக் தளத்தின் தலைவர் அஜய் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவர், காசியில் சிவபெருமான் வழிபாடு மட்டுமே நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
சாய்பாபா சிலைகளை அகற்றியதற்காக சாய்பாபா பக்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை கோயில்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதெனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை 14 கோயில்களில் சிலைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக மேலும் 50 கோயில்களில் இருந்து சிலைகளை அகற்றப் போவதாக அஜய் சர்மா அறிவித்திருந்தார். இந்த சம்பவத்தால் ஊரின் அமைதிக்கு பாதகம் விளைவிக்கக் கூடும் என்பதால் அஜய் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.