
பீகார் மாநிலம் சகர்சா பகுதியில் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடு மேய்த்துக் கொண்டு வந்து கொண்டிருந்த 14 வயது சிறுமியை அங்குஷ் மற்றும் பிட்டு ஆகிய இருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் ஏற்றியுள்ளனர். கார் ஓட்டுநர் காரை ஓட்டிக் கொண்டிருக்க இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் வெளியில் கேட்காமல் இருக்க காரின் உள்ளே பாட்டு சத்தத்தை அதிகரித்துள்ளனர். 2 மணி நேரத்திற்கு பிறகு சிறுமியை சாலையோரத்தில் விட்டுச் சென்றுள்ளனர். சிறுமி தாமதமாக வீடு வந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விசாரித்ததில் நடந்துவற்றை கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்த நிலையில் குற்றவாளிகளின் பெற்றோர் சிறுமியின் தந்தையிடம் பேரம் பேசியுள்ளனர். வேண்டிய பணத்தை தருவதாகவும் சிறுமியின் திருமணத்திற்கு உதவுவதாகவும் கூறியுள்ளனர். இதை கேட்டு கோபமடைந்து எவ்வளவு பணம் கொடுத்தாலும் தேவையில்லை. என் மகளுக்கு நீதி வேண்டும் என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.